மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்திய-இலங்கை கடற்படைகள் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

Fishermen
ராமேஸ்வரம்: கடலில் எல்லைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுப்பது குறித்து இலங்கை கடற்படையினருடன் இந்திய கடற்படை பேச்சு நடத்தவுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

இதுகுறித்து மண்டபம் இந்திய கடலோர காவல் படை தலைமை அதிகாரி டி.எஸ்.சைனி கூறுகையில்,

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனை குறித்து இலங்கை கடற்படையினருடன் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய கடற்படை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு இலங்கை கடற்படையினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

3 அல்லது 4 நாட்களில் இந்த பேச்சுவார்த்தை நடக்கும். உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள்.

இதில் மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசப்படும்.

தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தவறுதலாக தாண்டினால் அவர்கள் தாக்கப்படக் கூடாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து மீனவர்களை தாக்குவது தவறு. இதை இலங்கையிடம் பேசுவோம்.

சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடக்கவில்லை.

இந்திய, இலங்கை மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தெந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்துள்ளனர். இதை இந்திய இலங்கை அரசுகள் ஏற்றால், மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் கண்காணிக்க கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் சைனி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+