Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலிகள் குறி்த்து மத்திய அரசு தவறான பிரசாரம்-வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: தமிழர்களுக்கு துன்பம் விளைவிக்கவே விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்ததை எதிரித்து டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயம் இந்த மனுவை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக் கொள்ளக் கோரி வைகோ விண்ணப்பம் செய்தார். அதில், குற்றம் சாட்டுகிறேன்' என்ற அவரது ஆங்கில நூலையும் இணைப்பாக சேர்த்திருந்தார்.

இந்த வழக்கு தீர்ப்பாயம் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திர், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் தனஞ்சயன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வைகோ நேரில் ஆஜராகி தனது சார்பில் தானே வாதாடினார். அப்போது வைகோ முன் வைத்த வாதம்:

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து தனி தமிழ் ஈழ நாடு கோருவதால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு தனது வாதத்தில் கூறியுள்ளது.

தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம்.

வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை காட்ட முடியுமா?.

புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு செய்யும் திட்டமிட்ட பிரசாரமாகும்.

நான் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம்.

உலகம் முழுவதும் இணையதளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் அது.

தமிழர்களுக்கு துன்பம் விளைவிப்பதற்காகவே புலிகள் மீதான தடையை அரசு பயன்படுத்துகிறது என்றார் வைகோ.

புலிகள் மீதான தடையால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்று நீதிபதி கேட்டதற்கு பதிலளித்த வைகோ, ஒவ்வொரு முறை தடையை நீட்டிக்கும்போதும் என்னுடைய பேச்சுகளைக் காரணமாகக் காட்டி இருக்கிறார்கள். எனவே, தான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்றார் வைகோ.

அப்போது நீதிபதி, நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களே, நீங்கள் ஏன் அதில் உறுப்பினராகச் சேரவில்லை?' என்று கேட்டார்.

அதற்கு வைகோ, நான் உறுப்பினராகச் சேரவில்லை. ஆனால், அவர்களுடைய தமிழ் ஈழக் கோரிக்கையைத் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறேன். அவர்களது இயக்கத்தையும் ஆதரித்து வருகிறேன்' என்றார்.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், வைகோ, அந்த அமைப்பின் உறுப்பினராகவோ, அதிகாரபூர்வ பிரதிநிதியாகவோ இல்லை. அதனால், அவர் தரப்பு வாதத்தை, இந்த வழக்கில் அனுமதிக்கக் கூடாது என்றார்.

ஆனாலும் வைகோ தரப்பு வாதத்தைத் தொடர்ந்து எடுத்துரைக்க நீதிபதி அனுமதி அளித்தார். தொடர்ந்து வைகோ பேசுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருப்பதால், அவர்களது கொள்கையை ஆதரித்துப் பேசினால், அரசாங்கம் வழக்குப் போடுகிறது. இப்படிப் பேசியதற்காக, என்மீது இரண்டு தேசத்துரோக வழக்குகளை அரசு போட்டிருக்கிறது. அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்.

இனப் படுகொலையால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி, தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி, சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள். அல்லது, இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள்.

புலிகளின் மீதான தடையால், ஈழத்தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது. இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன் என்றார்.

உங்கள் மனுவின் மீதான ஆணை பின்னர் பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

அதன்பிறகு, இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 5ம் தேதி சென்னையிலும், 20ம் தேதி, ஊட்டியிலும் நடைபெறும் என்று நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+