கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றப் போகிறார் மமதா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதொடர்பாக எனக்கு அழைப்பு வந்துள்ளது. அக்டோபர் 25ம் தேதி நான் லண்டன் செல்கிறேன். 3 நாட்கள் தங்கியிருப்பேன். தி ரைசிங் பவர் என்ற தலைப்பில் பேசவுள்ளேன்.
அதேபோல இங்கிலாந்து அரசிடமிரு்தும் இன்னொரு அழைப்பு வந்துள்ளது. லண்டனில் தங்கியிருக்கும்போது இங்கிலாந்து நாட்டு போக்குவரத்து அமைச்சருடன் தேம்ஸ் நதியை சுற்றிப் பார்க்கவுள்ளேன். அங்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை சேகரிக்கவுள்ளேன். (முன்பு ஒருமுறை கொல்கத்தாவை லண்டன் போல மாற்றுவேன் என்று மமதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
லண்டனில் ரவீந்திரநாத் தாகூர் சில காலம் தங்கியிருந்த வீட்டையும் மமதா பார்க்கவுள்ளாராம். இந்த இல்லத்தில் இருந்தபோது கீதாஞ்சலியின் சில பகுதிகளை அவர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications