சைக்கிள் வீரர்களுக்குப் புதுப் பிரச்சினை-சைக்கிள்களை திருப்பிக் கொடுக்கப் போவதாக மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

சைக்கிளிங் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்காக பல கோடி மதிப்பில் வெளிநாட்டிலிருந்து அதி நவீன சைக்கிள்களை இறக்குமதி செய்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம். இவற்றை சில நாட்களுக்கு முன்புதான் வாங்கினர். தற்போது இந்த சைக்கிள்களைப் பெறும் வீரர், வீராங்கனைகளிடம், சைக்கிள்களுக்கு ஏதாவது ஆனால், அதாவது ரிப்பேர் ஆனால், அதற்கு நீங்களே பொறுப்பு என்று எழுதித் தருமாறு நிர்ப்பந்திக்கிறார்களாம்.
பான்ட் பேப்பரைக் கொடுத்து அதில் தாங்களே ரிப்பேரானால் பொறுப்பேற்பதாக எழுதித் தருமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாக வீரர், வீராங்கனைகள் குமுறியுள்ளனர்.கையெழுத்திட மறுத்தால் சைக்கிள் தரப்படாமல் மறுக்கப்படுவதாகவும், இதனால் வேறு வழியின்றி கையெழுத்துப் போட்டுத் தருவதாகவும் வீரர், வீராங்கனைகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications