சட்டமன்றத் தேர்தலில் போட்டியா?-மு.க.அழகிரி பதில்

அவர் சமீபத்தில் நாகர்கோயிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவரது பெயரை அழைப்பிதழில் சேர்க்காததால் அவர் அந்த விழாவை புறக்கணித்தார்.
இதைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலில் நடந்த விழாவிலும் பங்கேற்கவில்லை. இந் நிலையில் இன்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வரும் கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதே?
அழகிரி: அது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. அது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை நான் படிக்கவில்லை. அதற்கு விளக்கம் அளித்து தலைவர் (முதல்வர் கருணாநிதி) வெளியிட்ட அறிக்கைகளையும் நான் முழுவதுமாக படிக்கவில்லை. இதனால் அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை.
கேள்வி: நாகர்கோயிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் நீங்கள் பங்கேற்காதது குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறதே?.
அழகிரி: நீங்க, பேப்பர்காரங்க எல்லாம் சேர்ந்து எனக்கு இலவச விளம்பரம் குடுக்குறீங்க (சிரிக்கிறார்).
கேள்வி: சட்டமன்ற தேர்தலுக்குள் நீங்கள் தமிழகத்திற்கு வந்துவிடுவீர்கள் என்று பேசப்படுகிறதே?
அழகிரி: எலக்ஷன் வேலை பார்க்க வேண்டாமா. அதனால் வருவேன்.
கேள்வி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்குவீர்கள் என்று சொல்கிறார்களே...
அழகிரி: தினமும் என்னைப்பற்றி செய்தி வராத பத்திரிகையே இல்லை. இதற்கு நான் பதில் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications