காமன்வெல்த் போட்டிகளில் பெரும் ஊழல்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்துள்ள பெரும் முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தொடங்கவுள்ள இந்தப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளிலும் முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளன. பணிகள் தரமாக நடக்கவில்லை. போட்டி தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் பூர்த்தியடையவும் இல்லை.
இந் நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இந்தப் போட்டிகளுக்காக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜந்தர் மந்தர் பகுதியில் 100 மீட்டருக்கும் மேல் உயரமான கட்டிடம் கட்டப்படுவதை எதிர்த்தும் மத்திய அரசின் தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
நீதிபதி சிங்வி மற்றும் நீதிபதி கங்கூலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தொல்லியல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜந்தர் மந்தர் பகுதியில் விதிமுறைகளை மீறி உயரமான கட்டிடம் கட்ட டெல்லி மாநில அரசு அனுமதி அளித்தது செல்லாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்றார்.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ரூ.70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்று உள்ளதாக தெரிய வருகிறது. பணிகள் முழுமையாக நடைபெறாமலேயே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட பாலம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது வேதனை அளிக்கிறது.
டெல்லி அரசும் பல விதிமுறைகளை மீறியுள்ளது. தொல்லியல்துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படி பலவீனமான கட்டிடம் கட்ட டெல்லி அரசு அனுமதி கொடுத்தது ஏன்?.
இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்டு, நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றனர். இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
டிரைவரை தடுத்து நிறுத்தியதால் நடந்து சென்ற ப.சி:
இதற்கிடையே போட்டி அரங்கம் ஒன்றை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சென்றார். அவருக்கும், காருக்கும் உள்ளே செல்வதற்கான அனுமதி அடையாள அட்டைகள் இருந்தன.
ஆனால், அவருடைய பாதுகாப்பு அதிகாரி மற்றும் கார் டிரைவருக்கு அனுமதி அட்டை இல்லை. இதனால், நுழைவாயிலில் இருந்த டெல்லி போலீசார், சிதம்பரத்தின் தெரிவித்துவிட்டு இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
விதிகளுக்கு மதிப்பளித்த சிதம்பரம், அந்த இடத்திலேயே காரை விட்டு இறங்கி, பாதுகாப்பு அதிகாரியையும் டிரைவரையும் அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அரை கி.மீ. தூரம் நடந்து சென்று விளையாட்டு அரங்கை அடைந்தார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications