எட்டையபுரம் அருகே 8 கிலோ நகைக் கொள்ளை: கொள்ளையர்களைப் பிடிக்க மேலும் 2 தனிப்படை
தூத்துக்குடி: எட்டையபுரம் அருகே 8 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் காந்திலால், மகேந்திரசிங், சஜன்சிங் ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து நகைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது எட்டையபுரம் அருகே காரில் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவர்களிடம் இருந்த 8 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல இடங்களுக்கு தனிப்படையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர நகைகளை பறிகொடுத்த மூன்று ஊழியர்களிடமும் எட்டையபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அவர்கள் வைத்திருந்த செல்போன்களில் பதிவான எண்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள் வந்த சிவப்பு நிற காரின் பதிவு எண் போலியானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அது திருட்டு காராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் கார் திருட்டு தொடர்பாக பதிவான புகார்களை சேகரித்து விசாரிக்கின்றனர். நகைக் கடை ஊழியர்களை கொள்ளையர்கள் நீண்ட நாட்களாக கண்காணித்து வந்திருக்கக்கூடும் என்றும், சென்னையில் இருந்தே அவர்கள் நகைக் கடை ஊழியர்களை பின் தொடர்ந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இது தவிர சென்னை நகைக் கடையில் வேலை பார்த்தவர்கள் யாராவது கடந்த சில மாதங்களில் வேலையை விட்டு நின்றார்களா என்பது குறித்து கடை உரிமையாளர் அசோக்குமார் சிங்கிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. நகைகளை பறிகொடுத்த 3 ஊழியர்கள் எட்டயபுரத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications