இலவச பம்பு செட்டிற்கு 5 ஆண்டு இலவச பராமரிப்பு: அரசு அறிவிப்பு
நெல்லை: விவசாயிகள் தமிழக அரசு வழங்கும் இலவச மின் மோட்டார் பம்பு பொருத்திக் கொண்டால் 5 ஆண்டுகளுக்கு மின் சேமிப்பு குழுமம் பழுதுகளை இலவசமாகவே சரிசெய்து தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் பம்பு செட் வழங்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் அனைத்து விவசாய மோட்டார் பம்பு செட் குறித்து தகவல்கள் சேரிக்கப்பட்டுள்ளன.
இணைப்பு பெற்றுள்ளவர் பெயர், மின் இணைப்பு எண், திறந்த வெளிக் கிணறு, ஆழ்குழாய் கிணறு, நீர்முழ்கி மோட்டார் அல்லது மோனோபிளாக் மோட்டார் என கணக்கெடுக்கப்பட்டது. இதன் விபரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு என மின் சேமிப்பு குழுமம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் விவசாயிகளிடம் உள்ள பழைய மோட்டாரைப் பெற்றுக் கொண்டு மின் சேமிப்புக்கு ஏற்ற வகையில் திறன்மிகு மோட்டாரை பொருத்துவர். புதிய மின் மோட்டார் மூலம் எவ்வளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய மின் அளவி (மீட்டர்) பொருத்தப்படும்.
இந்த மீட்டர் மூலம் மின் சேமிப்பு விபரம் தெரிய வரும். அதேசமயம், மீ்ட்டர் மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படமாட்டாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications