அயோத்தி தீர்ப்பை அமல்படுத்துவது மாயாவதி அரசின் பொறுப்பு-தப்பிக்கும் காங்.

அயோத்தி தீர்ப்பு வெளியாகி விட்ட நிலையில் அது தங்களைப் பாதித்து விடாமல் தப்பிக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளதால் அயோத்தி தீர்ப்பு விவகாரத்தில் மிக மிக கவனமாக இருக்க முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முடிவு செய்துள்ளன.
அயோத்தி தீர்ப்பை யார் நிறைவேற்றுவது என்பதில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பர்வேஸ் ஹஸ்மி கூறுகையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு உத்தரபிரதேச மாநில அரசுக்கு தான் உள்ளது.
தீர்ப்பை தங்களால் நிறைவேற்ற இயலாது என்று மாநில அரசு சொன்னாலோ அல்லது மாநில அரசால் தீர்ப்பை நிறைவேற்ற இயலாது என்று மத்திய அரசு கருதினாலோ அல்லது முதல்வர் ராஜினாமா செய்தாலோ தான் இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட முடியும் என்றார் ஹஸ்மி.












Click it and Unblock the Notifications