அயோத்தி விவகாரம்-இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே சிறந்தது: ஜெயேந்திரர்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி விவகாரம் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பு, பிரச்சனைகளைப் பேசி தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பு வந்த நாளில் அனைத்துத் தரப்பு மக்களும் அமைதி காத்தது அவர்களுக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுள்ளதையே எடுத்துக் காட்டுகிறது.
அயோத்தி பிரச்சனையை பொறுத்தவரை நீதிமன்றம் மூலமோ, அரசியல் மூலமோ சுமுகமாகத் தீர்க்க முடியாது. அதை இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே சிறந்தது.
இது தொடர்பாக அயோத்தியில் உள்ள சாதுக்கள், சங்கச்சாரியார் மடம் உள்ளிட்ட பல்வேறு மடங்களின் மடாதிபதிகள் மற்றும் இந்து மதத் தலைவர்கள், சன்னி வக்ப் வாரியம், தனி நபர் முஸ்லிம் சட்ட வாரியம் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
அப்போதுதான் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு உன்டாகும் என்றார் ஜெயேந்திரர்.












Click it and Unblock the Notifications