For Daily Alerts
Just In
காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வாபஸ்-அமைதி திரும்புகிறது
இன்றைய தினம் எந்தப் போராட்டத்தையும் நடத்த வேண்டாம் என பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டு கட்சி அறிவித்திருந்தது. இதனால் காஷ்மீர் முழுவதும் அமைதி நிலவுகிறது.
நேற்று இரவு கங்கன் நகரில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மற்ற பகுதிகள் அனைத்திலும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
கங்கன் டவுன் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதனால்தான் அங்கு மட்டும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படவில்லை.
Comments
Story first published: Saturday, October 2, 2010, 16:19 [IST]