ராஜபக்சேவிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அனோமா பொன்சேகா
கொழும்பு: எனது கணவரோ அல்லது நானோ, ராஜபக்சேவிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று கூறியுள்ளார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகாவின் மனைவி அனோமா.
விடுதலைப் புலிகளுடன் நடந்த போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்த பின்னர், அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த பொன்சேகாவை கீழே போட்டு மிதிக்க ஆரம்பித்தது ராஜபக்சே அரசு. அவரும், அவரது தம்பி கோத்தபயாவும் சேர்ந்து பொன்சேகாவை ஓரம் கட்ட ஆரம்பித்தனர். இதனால் வெகுண்ட பொன்சேகா, ஓய்வுக்குப் பின்னர் அரசியலில் குதித்தார். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார். அடுத்த நிமிடமே அவரை கைது செய்து விட்டனர்.
ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கியதில் முறைகேடு செய்தார் என்று கூறி ஒரு வழக்கும், வேறு சில வழக்குகளும் ராணுவ கோர்ட்டில் தொடரப்பட்டது. இதில் ஆயுத ஊழல் வெழக்கில் பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தற்போது சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளனர்.
கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா மன்னிப்பு கேட்டால் அவரை மன்னித்து விடுதலை செய்ய அதிபர் பரிசீலிப்பார் என்று கோத்தபயா கூறியுள்ளார்.
இதுகுறித்து கோத்தபயா கூறுகையில், பொன்சேகா மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானதல்ல. இதனால் இந்த விவகாரத்துக்கு போராட்டத்தின் மூலமோ, மூன்றாம் நபரின் தலையீட்டு மூலமோ தீர்வு காண முடியாது.
பொன்சேகா தனக்கு அளிக்கப்பட்டுள்ள 30 மாத சிறைத்தண்டனையை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தால் அதை பரிசீலிக்க அதிபர் தயாராக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
ஆனால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொன்சேகாவின் மனைவி அனோமா கூறியுள்ளார்.
கணவரைப் பார்க்க சிறைக்கு வந்திருந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொன்சேகா உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் மன்னிப்புக் கோரலாம். அவர் நிரபராதி என்கிற போது ஏன் மன்னிப்புக் கோர வேண்டும். பொன்சேகாவின் மீதான நடவடிக்கை அரசியல் நோக்கமுடையது.
அதிபர் ராஜக்சேவின் விருப்பத்துக்கு இணங்க பொன்சேகாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார் அனோமா.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications