For Daily Alerts
Just In
பதட்டம் நீங்கியதால் அயோத்தியை விட்டு பாசறைக்குத் திரும்பியது புற ராணுவம்
லக்னோ: அயோத்தி தீர்ப்பால் ஏற்பட்ட பதட்டத்தைத் தொடர்ந்து அயோத்தி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குவிக்கப்பட்ட புற ராணுவத்தினர் தற்போது அங்கிருந்து தங்களது முகாம்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
நேற்று காலை முதலே இவர்கள் தங்களது முகாம்களுக்குத் திரும்பத் தொடங்கி விட்டனர்.
ஆனால் மேலும் 2 மாதங்களுக்கு புற ராணுவப்படையினர் உ.பியின் முக்கிய நகரங்களில் நிறுத்தப்பட வேண்டும் என உ.பி. முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார். அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதுதொடர்பாக மாயாவதி எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலே அனுப்பவில்லையாம்.
புற ராணுவப் படையினர் வெளியேறி வரும் போதிலும், அதி விரைவுப்படையினர் 1000 பேர் உ.பியில் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, October 3, 2010, 12:58 [IST]