ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
பெங்களூர்: ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு பெங்களூரில் நடந்தது.
அதில் பேசிய திருமாவளவன், எனக்கு என் மொழி என் தாயை போன்றது. அதே சமயம், மற்ற மொழி இழிவானது என்று பொருள் அல்ல. அதுவும் எனது தாய்மார்களை போன்றது. நாட்டில் உள்ள எந்த மொழியும் தாழ்வானது அல்ல.
நம்மிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் நமது உரிமைகள் பறிபோய்விடும். ஒற்றுமை இல்லாததால் நமது நாடே முற்காலத்தில் வேறு ஒரு ஆதிக்கத்தின் கீழ் சென்றது. தலித் மக்கள், சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டால் தான் அடக்குமுறையில் இருந்து நாம் எல்லாம் விடுபட முடியும்.
பதவிக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு இந்தக் கட்சியில் இணைய வேண்டாம். ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க நீங்கள் போராட வேண்டும்.அப்படிப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் தலித் அரசியல் களம். எனவே எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கக்கூடாது.
அகில இந்திய அளவில் கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள், தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தால், இவர்களில் ஒருவர் தான் நாட்டின் பிரதமராக வரமுடியும். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் நம்மால் அந்த பதவியை அடைய முடியவில்லை.
மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் பிரதமர் ஆகிறார், முக்கிய பதவிகளை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் நம்மை எல்லாம் அடக்கி ஆள்வது தான் அதற்குக் காரணம்.
தலித் மக்கள் வெறும் ஓட்டுபோடும் எந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.
பாமர் மசூதி-ராமஜென்ம பூமி விவகாரத்தில்வழக்கு போட்ட மூவரும் சரிசமமாக நிலத்தை பங்கு போட்டு கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.
இது சரியான தீர்ப்பல்ல. 10 பேர் வழக்கு போட்டிருந்தால் அதை 10 பேருக்கும் சரிசமமாக பிரித்து பங்கு போட்டு கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமா?. இந்த வழக்கில் நீதிமன்ற மரபே மீறப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்தத் தீர்ப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது, வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். நாட்டில் கலவரம் ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
ஆனால், ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமோ, ஆவணங்களோ கிடையாது. ஆனால் பாபர் ஒரு வரலாற்று நாயகன் என்பதை வரலாறு கூறுகிறது என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications