4 சீட்-அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சிகள்-அமைச்சர் அன்பழகன் பாய்ச்சல்

விருத்தாசலத்தில் தி.மு.க. அரசு சாதனை விளக்க பொதுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அன்பழகன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால், தி.மு.க. தான் பாரம்பரியமான திராவிட கட்சியாகும்.
அ.தி.மு.க. என்றால் ஜெயலலிதா, தே.மு.தி.க. என்றால் விஜயகாந்த் மட்டுமே கட்சியில் கருத்துகள் கூற முடியும்.
விருத்தாசலம் தொகுதியிலிருந்து வந்த எம்.எல்.ஏ -வை சட்டசபையில் பார்க்கவே முடியவில்லை. செய்தித்தாள்கள் மூலமாகத்தான் அரசுக்கு ஆலோசனைகளை கூறுகிறார். சினிமாவில் மட்டும் தான் அவரைப் பார்க்க முடிகிறது.
தி.மு.க.போன்று மற்ற கட்சிகளுக்கு மக்களிடம் நேரடி தொடர்பு இல்லை. அரசியல் வியாபாரத்திற்காக சிலர் கட்சி துவங்கி நாங்கள் தான் முதல்வர் என்கின்றனர்.
ராமதாஸ், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார். அதனால் தான் அவர் அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கிறார்.
அரசியலில் யாருக்கும் லட்சியமே இல்லை. எப்படியாவது நாலு இடம் கிடைச்சா அதை வைத்து அமைச்சராகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்த பகுதியில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமான திட்டக்குடி வெலிங்டன் ஏரியை மூன்று முறை தூர் வாரியது தி.மு.க. அரசு தான்.
ஏழைகளின் பசியைப் போக்க ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம், கான்கிரீட் வீடு திட்டம் என எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது. இந்த திட்டங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் கிடையாது.
இன்று கல்வி, மருத்துவம், வீட்டு வசதி என பல துறைகளில் தமிழகம் முன்னேறுவதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications