வேதியியலுக்கான நோபல் அறிவிப்பு-ஒரு அமெரிக்கர், 2 ஜப்பானிய விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்கிறார்கள்
Subscribe to Oneindia Tamil

மருத்துவம், இயற்பியலைத் தொடர்ந்து இன்று வேதியியலுக்கான நோபல் பரிசை நோபல் பரிசுக் கமிட்டி ஸ்டாக்ஹோமில் அறிவித்தது. இதை மூன்று விஞ்ஞானிகள் சேர்ந்து பெறுகின்றனர். இவர்கள் ஆர்கானிக் வேதியியலில், கார்பன்-கார்பன் பிணைப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஆவர். இந்த ஆய்வுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக மூவருக்கும் நோபல் பரிசு கிடைத்துள்ளது.
டெலவரே பல்கலைக்கழக பேராசிரியர் ஹெக், பர்டியூ பல்கலைக்கழக பேராசிரியர் நெகிஷி, ஹோக்கைடோ பல்கலைக்கழக பேராசிரியர் அகிலா சுசுகி ஆகியோரே அந்த மூவர்.
இவர்கள் உருவாக்கிய ஆய்வு தொழில்நுட்பத்தின் பெயர் பல்லடியம் கைட்டலைட்ஸ் கிராஸ் கப்ளிங் என்பதாகும்.
இதை விவசாயம் முதல் பார்மச்சூட்டிகல் வரை பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications