தமிழகத்தில் ஆட்டோ, கால்டாக்சி கட்டணம் உயரும்
சென்னை: ஆட்டோ, கால்டாக்சி கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆட்டோ ரிக்சா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நலவாரியத்தின் ஐந்தாவது கூட்டம் சென்னையிலந நடந்தது.
இதில் போக்குவரத்துத்துறை அமைச்சரும், வாரியத் தலைவருமான கே.என்.நேரு, போக்குவரத்துத்துறை ஆணையர் (பொறுப்பு) தங்கசாமி, தொழிலாளர் ஆணையர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நேரு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால்,2007ல் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் கால்டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வருடன் கலந்து பேசி ஆட்டோ, கால்டாக்சி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
ஆட்டோக்கள் மற்றும் கால்-டாக்சிகளை கேஸ் மூலம் இயக்குவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருகிறது என்றார்.