மதுரையில் ரூ. 85 கோடியில் நவீன காய்கறி மார்க்கெட்-அழகிரி அறிவிப்பு
மதுரை: மதுரையில் விரைவில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் நவீன காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும் என்று மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது, பொதுமக்களை சந்தித்த வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மிகவும் நெருக்கடியான இடத்தில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டை மாற்றி, வேறொரு இடத்தில் அனைத்து நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்கூடிய நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைத்துத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தேன்.
நான், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்பு மதுரை மாவட்டத்தில் உள்ள தென்பகுதி விவசாயிகளுக்காகவும், வியாபாரிகளுக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் சுகாதாரமான, காற்றோட்டமான அனைத்து வசதிகளுடன், நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய மார்க்கெட்டினை அமைத்துத்தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்த முதல்வர் கருணாநிதி, அது தொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.85 கோடி செலவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கும், பூ மார்க்கெட்டிற்கும் இடையே உள்ள சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதி களுடன்கூடிய நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தற்போது ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. காய்கறி மார்க்கெட்டிற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, வரும் 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்தப் பணிகளை முடிப்பதற்காக மீதமுள்ள ரூ.55 கோடியும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.
இதனால், தென் மண்டல விவசாயிகளின் நீண்டநாள் கனவாகிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காய்கறி மார்க்கெட் தொடங்கப்படும். அதன் மூலம் ஒரே இடத்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்களை சேகரிக்க முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்யலாம். நுகர்வோருக்கு தரமான காய்கறி மற்றும் பழங்கள் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளும் கிடைக்கும். குளிர்சாதன சேமிப்பு வசதியுடன் இந்த காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications