For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசி: தென்காசி சுற்றுப் பகுதியில் 3 பெண்களை கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்ற நபரைப் போலீஸார் க

Google Oneindia Tamil News

Man Arrested for Killing 3 Women
தென்காசி: தென்காசி சுற்றுப் பகுதியில் 3 பெண்களை கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்ற நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் கடந்த 8-9-2010 அன்று சிவகாமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் தாயனல், இவரது மனைவி மேரி புஷ்பம். வீட்டில் தனியாக இருந்த போது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதே போன்று தென்காசி ஹவுசிஸ் போர்டு காலனியின் அருகே சிவந்தி நகரில் ஒரு பெண் இதே போன்று கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

கடையம் பொட்டல்புதூரில் குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த 3 கொலைகளும் ஒரே போன்று இருந்ததால் கொலையாளிகளை எஸ்பி ஆஸ்ரா கர்க் தனிப்படை அமைத்து தேடி வந்தார்.

இந்நிலையில் தென்காசி மத்தாளம்பாறையை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி அலெக்ஸ் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்ததில் 3 பெண்களையும் நகைக்காக கொலை செய்தததும், தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு பின் இதுபோன்று குற்றம் தறபோது நடந்துள்ளதும், நெல்லை எஸ்பியின் தீவிர நடவடிக்கையால் குற்றுவாளி பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X