பொள்ளாட்சி பகுதி விவசாயத்திற்கு ஆழியாறு அணை திறப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணைப்பகுதியில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு பல ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது.
இந்த பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயனுறும் வகையில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
பொள்ளாச்சி கால்வாய் வழியாக விநாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், வேட்டைக்காரன் புதூர் கால்வாய் வழியாக 70 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
அப்போது, அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், 60 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் 22 ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்விநியோக கால அளவு முடிவு செய்யப்படும் என்றார்.
உடன் மாவட்ட ஆட்சியர் உமாநாத், சட்டமன்ற உறுப்பினர் கோவைத்தங்கம் உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications