கோவில் அருகே டாஸ்மாக் கடை-கட்சிகள் தொடர் போராட்ட அறிவிப்பு
பாபநாசம்: பாபநாசம் கோவிலுக்குச் செல்லும் வழியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி ஆகியவை அறிவித்துள்ளன.
பாபநாசம் கோவில் செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்பவர்கள் மதுபாட்டில்களை எடுத்து செல்ல கூடாது என்று வனத்துறை தடை விதித்துள்ள நிலையில் வனத்துறை செக்போஸ்ட் செல்லும் சாலையில் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு செல்லும் குடிமகன்கள் போதையில் வேண்டாத செயல்களில் ஈடுபட்டால் பிரச்சனைகள் உருவாகும். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்த கடையை உடனே அகற்ற வேண்டும் என்று தேமுதி்க, சமக, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளன. விகேபுரம் நகர தேமுதிகவினர் கண்டன போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றாவி்ட்டால் உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளனர்.