கழிவறை குழியி்ல் விழுந்து 3 வயது குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே கழிவறைக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 3 வயதுக் குழந்தை பரிதாபமாக இறந்தது.
திருவனந்தபுரம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு 3 வயதில் ஸ்ரீகுட்டன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
சம்பவதன்று வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீகுட்டன் தோட்டத்தின் ஓரத்தில் இருந்த கழிவறைக்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் எதிர்பாரவிதமாக தவறி விழுந்தான். அவனது சத்தம் கேட்டு பெற்றோர் வெளியே வந்தனர். உடனே சத்தம் போட்டு மகனை காப்பாற்ற முயன்றனர். அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர்.
ஸ்ரீகுட்டனை கழிவறை குழியில் இருந்து மீட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மூச்சு திணறி ஸ்ரீகுட்டன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications