ஓடும் பஸ்சில் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்- கத்திக்குத்து: 4 பேர் காயம்- 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ஓடும் பஸ்சில் நந்தனம் கலைக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் மூண்டது. இதில் மாணவர்கள் கத்திகளால் தாக்கிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் மோகன், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சென்னை மந்தைவெளியில் இருந்து அம்பத்தூருக்கு மாநகர போக்குவரத்து கழக பஸ் 41டி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அண்ணாநகர் புளு ஸ்டார் நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது சில கல்லூரி மாணவர்கள் ஏறினர். அப்போது ஏற்கனவே பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்களுடன் அவர்களுக்குத் தகராறு ஏற்பட்டது.
முதலில் அடிதடியில் இறங்கிய மாணவர்கள், திடீரென கத்திகளால் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.
இதில் 4 மாணவர்களுக்கு கத்திக் குத்து விழுந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டது, பிற பயணிகள் இறங்கி ஓடினர்.
தகவல் அறிந்து அண்ணாநகர் உதவி கமிஷனர் மதி தலைமையில் போலீஸ் படை வந்தது. அதற்குள் மாணவர்கள் தப்பியோடிவிட்டனர்.
கத்திக் குத்தில் காயமடைந்த சுரேஷ் (19), சனத்குமார் (19), அஸ்வின் (20), உமாபதி (20) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் மோகன், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications