ஆளுநர் பர்னாலா 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை குமரி வருகை
நாகர்கோவில்: தமிழக ஆளுநர் பர்னாலா நாளை குமரி வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நாகர்கோவலில் நடந்தது.
தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 15, 16 ஆகிய தேதிகள் கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 10.45க்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் அவர் கன்னியாகுமரி புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் பகல் 1 மணிக்கு சென்னை புறப்பட்டுச் செல்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கலைசெல்வன் தலைமையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழக ஆளுநர் பர்னாலா குமரி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆளுநரின் இரண்டு நாள் சுற்றுபயணம் நல்லமுறையில் அமைந்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications