பெங்களூரில் நெல்லை பெண் இன்ஜினியர் கொலை: உறவினர் சிக்குகிறார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பெங்களூரில் கொல்லப்பட்ட நெல்லை பெண் இன்ஜினியர் கொலையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி அவரது நெருங்கிய உறவினர் எனவும், ஒருதலை காதலால் அவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும், கொலையாளியை 2 நாளில் கைது செய்து விடுவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் இன்ஜினயர் மலர்விழி. இவர் கணவர் பாலசுப்பிரமணியத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். கடந்த 11-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மலர்விழி மர்ம நபரால் கொல்லப்பட்டார். பிரேத பரிசோதனையி்ல் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானது தெரிய வந்தது.

தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையாளியைப் பிடிக்க பெங்களூர் தனிப்படை போலீசார் சென்னை, நெல்லை விரைந்தனர். குறிப்பாக நெல்லையில் முகாமிட்டு அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

கொலையாளி மாஜி காதலனா அல்லது கல்லூரித் தோழனா என்ற சந்தேகம் வலுத்த நிலையில் தற்போது மலர்விழியின் நெருங்கிய உறவினர்தான் கொலையாளி என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீ்ஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சம்பவத்தன்று மலர்விழியின் வீட்டுக்கு பெற்றோருடன் சென்றதாக கூறப்படும் நபர் மலர்விழியின் காதலனாக இருந்தாலும் அவர் நெருங்கிய உறவினராக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. திருமணம் முடிந்த பின் பெற்றோருடன் வந்தாலும் மாஜி காதலனை சந்திக்க மலர்விழி விரும்பி இருக்க வாய்ப்பில்லை. எனவே கொலையாளி நெருங்கிய உறவினர் தான் என்று நம்புகின்றனர்.

தற்போது அந்த கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், நெல்லையில் இருந்து தனிப்படை போலீசார் நாகர்கோவில் விரைந்துள்ளதாகவும், எனவே கொலையாளி நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+