For Daily Alerts
Just In
இந்திய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரூ 1.81 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி!
டெல்லி: இந்திய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கு 41 பில்லியன் டாலர் (ரூ 1.81 லட்சம் கோடி) அந்நிய முதலீடு கிடைக்கவுள்ளது. இத் தகவலை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய நெடுஞ்சாலைத் திட்டம் என்ற பெருமைக்குரியது 'இந்திய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்'. இதனை இந்தியாவின் பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படுத்துகின்றன.
இதன் மொத்த திட்ட மதிப்பு 70 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ 3.09 லட்சம் கோடி.
இதில் ரூ 1.81 லட்சம் கோடி இப்போது வெளிநாட்டு நிதி மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்தே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கமல்நாத் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டுக்குள் நாட்டில் மொத்தம் 35000 கிமீ தூரத்துக்கு 6 வழிச் சாலைகள் கொண்ட நெடுஞ்சாலைகளை அமைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
Comments
Story first published: Sunday, October 17, 2010, 18:00 [IST]