பள்ளி மாணவனை கொலை செய்து நகை பணம் கொள்ளை: வத்தலகுண்டு அருகே கொடூரம்
வத்தலக்குண்டு : வத்தலகுண்டு அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவனை கொலை செய்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொலையாளிகளைக் கைது செய்யக்கோரி பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பெரியார் வீதியைச் சேர்ந்தவர் கணேசன். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர் செம்பட்டியில் உள்ள கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். 2-வது மகன் கவுதம் ( 15). இவர் பட்டிவீரன்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கவுதம் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். பள்ளி வகுப்புகள் முடிந்து மாலையில் அதே பகுதியில் டியூசனுக்கும் சென்று வந்தார்.
இந்த நிலையில் பணியை முடித்துக் கொண்டு கணேசனும், விஜயாவும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததோடு, வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்த போது அங்குள்ள அறையில் பதுங்கி இருந்த கவுதமின் நண்பன் மணிகண்டபிரபுவும் மற்றொருவனும் அங்கிருந்து ஓடினர்.
இதையடுத்து மகனை கணேசன் தேடியபோது, படுக்கை அறையில் கவுதம் மின் வயரால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். கவுதமின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே கணேசன் வீட்டிலிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 38 பவுன் நகை, ரூ.13 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமசாமி, வழக்குப் பதிவு செய்து கொலை செய்யப்பட்ட கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை உடனே கைது செய்யக் கோரி பொது மக்கள் வத்தலக்குண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications