கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் வழக்கு : நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு - வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் இரண்டாவது முறை வென்றபோதிலும் அரசு இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை.
தங்கள் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 16 எம்.எல்.ஏ.-க்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அது இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த 16 எம்.எல்.ஏ.-க்களில் 11 பேர் பாஜகவினர், 5 பேர் சுயேட்சைகள். இதில் பாஜக எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கேஹர் சிங் மற்றும் நீதிபதி என். குமார் ஆடங்கிய பெஞ்ச்சில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் தலைமை நீதிபதி சபாநாயகர் செய்ததற்கு ஆதரவளித்துள்ளார். ஆனால் நீதிபதி மோகன் சபாநாயகரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து 11 பாஜக எம். எல்.ஏ.-க்களின் வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை மூன்றாவது நீதிபதி ஒருவர் விசாரிப்பார் என்று அந்த பெஞ்ச் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே 5 சுயேட்சை எம்.எல்.ஏ.-க்களின் வழக்கை அடுத்த மாதம் 2-ம் தேதி ஒத்திவைப்பதாக அந்த பெஞ்ச் மேலும் தெரிவித்தது. இந்த வழக்கை வேறொரு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்பதற்கு 2 நபர் பெஞ்ச் ஒப்புதல் அளித்துள்ளது.