டக்ளஸ் தேவானந்தா துணையுடன் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றம்!

இதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதவியுடன் நடந்து வருவதாக இலங்கையின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை அதிபர் ராஜபக்சே வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பெர்ணான்டோ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கூட்டுறவு சங்கங்களின் மூலம் அடுத்த மூன்று மாத காலத்துக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வட பகுதியில் வசித்த மக்கள் முள்வேலி முகாம்களில் வாடும் நிலையில், சிங்களர்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துவதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து தமிழ்ப் பகுதிகளுக்குமே சிங்களப் பெயர்களைச் சூட்டுவதிலும், தமிழரின் கலாச்சார அடையாளங்களை அழிப்பதும் முனைப்பு காட்டுகிறது இலங்கை.












Click it and Unblock the Notifications