வியட்நாமில் பேருந்தை அடித்துச் சென்றது வெள்ளம்: 30 பேர் பலி
ஹனோய்: வியட்நாம் வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகியுள்ளனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த 20 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுளளனர்.
இதற்கிடையே புயல் மெகி இன்று கரையைக் கடந்தது.
அந்தப் பேருந்தில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட 17 பேர் மரங்களையும், கட்டைகளையும் பிடித்துக் கொண்டே நீந்தியுள்ளனர். இவர்களை போலீசாரும், மீனவர்களும் மீட்டனர். ஆனால் அதில் பயணம் செய்த மேலும் 20 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
லாம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 46 வயதான பெண் தனது மகளையும் வைத்துக் கொண்டு 3 மணி நேரமாக தத்திளித்துள்ளார். வெள்ளம் இவரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. வெகுநேரமாக போராடியதால் களைத்துப் போன அவரின் கைகளில் இருந்த மகளை வெள்ளம் இழுத்துச் சென்றது. காணாமல் போன மூன்று குழந்தைளில் இவரின் குழந்தையும் ஒன்று.












Click it and Unblock the Notifications