For Daily Alerts
Just In
மூன்றாவது நீதிபதி முன் கர்நாடக எம்.எல்.ஏ-க்களின் வழக்கு விசாரணை தொடங்கியது
பெங்களூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட 11 பாஜக எம்.எல்.ஏ-க்களின் வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதை புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு நபர் பெஞ்ச் விசாரிக்கவிருக்கிறது.
ஏற்கனவே நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தற்போது நீதிபதி வி.ஜி. சுப்பையா முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே. எஸ். கேஹர், சபாநாயகர் செய்ததற்கு ஆதரவளித்துள்ளார். ஆனால் நீதிபதி மோகன் சபாநாயகரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
Story first published: Wednesday, October 20, 2010, 12:05 [IST]