எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்

திராவிடக் கட்சிகளைப் போல நடிகர்கள் பின்னால் போக ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். கிடைக்கிற நடிகர்களையெல்லாம் கட்சியில் சேர்க்க முடிவு செய்து விட்டது போலத் தெரிகிறது. முன்பு விஜய்யை முயற்சித்துப் பார்த்தார்கள், முடியவில்லை. அஜீத்தையும் இழுக்க முயன்றனர், அதுவும் சரிவரவில்லை. இந்த நிலையில் தற்போது கிடைக்கிற நடிகர், நடிகைகளை இழுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் டெல்லி போய் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். முன் கூட்டியே இமெயில் மூலம் ராகுல் காந்தியிடம் நேரம் கேட்டு அதன்படி போய்ப் பார்த்தார். இதையடுத்து விரைவில் தான் காங்கிரஸில் சேரப் போவதாக கூறியுள்ளார் சேகர்.
இந்த நிலையில் இன்று வில்லன் நடிகர் ராதாரவி ராகுல் காந்தியை டெல்லி சென்று சந்தித்துப் பேசினார். நேற்று டெல்லி சென்ற அவர், சோனியா காந்தி வீட்டுக்கு இன்றுகாலை போய் ராகுல் காந்தியை சந்தித்து 10 நிமிடங்கள் பேசி விட்டு வந்தார்.
இதுகுறித்து ராதாரவி கூறுகையில், திரைப்பட விழா தொடர்பாக ராகுல் காந்தியை அழைக்குச் சென்றிருந்தேன். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம்.
காங்கிரஸில் சேருவதாக இருந்தால் இமெயில் மூலம் எனக்குத் தகவல் அனுப்புங்கள் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். ஒருவாரத்தில் இதுகுறித்து முடிவெடுத்து அறிவிப்பேன்.
ராகுல் காந்தியை எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு சக்தி வாய்ந்த தலைவர் என்று கூறினார் ராதாரவி.
ராதாரவி பல கட்சிகளைப் பார்த்தவர். ஆரம்பத்தில் திமுகவில் தீவிரமாக இருந்தார். எம்.எல்.ஏ. சீட் உள்பட எதுவும் தரப்படவில்லை என்ற அதிருப்தியில் அவரும், எஸ்.எஸ்.சந்திரனும் அங்கிருந்து விலகி மதிமுகவுக்குப் போனார்கள். பின்னர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் ராதாரவிக்கு சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. சீட் தரப்பட்டு அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் காலப்போக்கில் அம்மாவின் மனதிலிருந்து ராதாரவி இறக்கி விடப்பட்டார். அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். சமீபகாலமாக திமுக தரப்புடன் நட்பு பாராட்டி வந்தார். இருப்பினும் திமுகவில் இணையவில்லை. இந்த நிலையில் காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications