கரூர் அருகே குடிநீர் வேண்டி பஸ் சிறைபிடிப்பு-மக்கள் போராட்டம்
கரூர்: கரூர் அருகே குடி நீர் முறையாக வினியோகம் செய்யாத நெரூர் தெற்கு பஞ்சாயத்தை கண்டித்து அந்த பகுதியாக வந்த போக்குவரத்து வாகனங்களை சிறை பிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம் , நெரூர் தென்பாகம் பஞ்சாயத்தில் நெரூர் தெற்கு, பகுதி, அக்ரஹாரம், மறவாபாளையம், புதுத் தெரு, புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை போன்ற பல குக்கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களுக்கு முறையாக பஞ்சாயத்து சார்பில் குடி நீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. மேலும், கிராம பகுதிகளில் உள்ள அடி பைப்பை சரி செய்வதும் இல்லை. இதனால் பொது மக்கள் குடி நீருக்கு திண்டாடி வந்தனர். இது குறித்து பல முறை பஞ்சாயத்து தலைவருக்கும் , மாவட்ட கலெக்டருக்கும் மனு கொடுத்தும் உரிய நவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் வேடிச்சிபாளையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பொது மக்கள் சுமார் 300 பேர் திரண்டு சிறைபிடித்தனர். இதனால் இப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சிறை பிடிக்கப்பட்ட பஸ்களை மீட்க பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications