காஷ்மீரில் கல்வீசி போராட்டம் நடத்தியவர்களுக்கு நிதியுதவி அளித்த பாக்.
திரிபாதி தற்போது இப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வீச்சு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்துள்ளது. மிகப் பெரிய அளவில் அவர்களுக்கு எல்லைக்கு அப்பாலிருந்து உதவிகள் வந்துள்ளன.
கல்வீசிப் போராட்டத்தில் ஈடுபடுமாறு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். பண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே இது திட்டமிட்ட செயலாகும் என்றார்.
முன்னதாக கல்வீச்சில் ஈடுபட்டிருப்போருக்கு பாகிஸ்தான் ஆதரவும், லஷ்கர் இ தொய்பா ஆதரவும் இருப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கு.
திரிபாதி தொடர்ந்து கூறுகையில், இந்த கல்வீச்சுப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி பிரிவினைவாதிகளுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. குளிர்காலத்திலும் இதேபோன்ற போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. ஒபாமா வருகையின்போதும் இதுபோல நடக்கலாம். இதை தடுக்க பாதுகாப்புப் படையினர் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.













Click it and Unblock the Notifications