'பாகிஸ்தானுக்கு ரூபாய் தாள் காகிதம் - மை சப்ளையை நிறுத்த வேண்டும்!' - ராஜ்நாத் சிங்
பாட்னா: இந்தியாவில் கள்ள நோட்டுக்களை பரவிடும் பாகிஸ்தானுக்கு, ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தேவையான மை மற்றும் காகிதங்களை ஜெர்மனிதான் வழங்குகிறது என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்.
உடனடியாக, மை, காகிதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு ஜெர்மனியைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், "இந்தியாவில் பரவும் கள்ள நோட்டுக்கள் பாகிஸ்தானில் உள்ள க்வெட்டா அரசு அச்சகத்தில்தான் அச்சிடப்படுகின்றன. நேபாளம் வழியாக இந்த நோட்டுக்களை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள்.
இதனைத் தடுக்க வேண்டுமானால், முதலில் பாகிஸ்தானுக்கு ரூபாய் தாள் அச்சடிப்பதற்கான காகிதங்கள், மை சப்ளை செய்யும் ஜெர்மனியிடம், அதை உடனே நிறுத்துமாறு கோர வேண்டும்.
அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டுள்ள சீனாவின் செயலை சர்வதேச அரங்கில் எடுத்துப் போய், இனி அப்படி நிகழாமல் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. சீனாவின் வரைபட சேவை துவங்கிய கையோடு இதைச் செய்திருக்க வேண்டும்", என்றார்.












Click it and Unblock the Notifications