சட்ட மேலவை தேர்தலுக்குத் தடை கோரி திண்டிவனம் ராமமூர்த்தி வழக்கு

Subscribe to Oneindia Tamil

Tindivanam Ramamurthy
சென்னை: தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,தற்போதைய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருக்கும் திண்டிவனம் ராமமூ்ர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் கூறியிருப்பதாவது:

அரசியல் சட்டம் 169-வது பிரிவின்படி தமிழ்நாட்டில் மேல்- சபை அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

தற்போது மேல்- சபை தேர்தலுக்கு தொகுதி வரையறை செய்ததற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கும் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

அவ்வாறு ஒப்புதல் பெறாமல் தமிழக மேல்- சபை தேர்தலை நடத்தக்கூடாது. ஒப்புதல் பெறும்வரை அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+