சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுடன் காஷ்மீர் சமரச பேச்சாளர்கள் சந்திப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் சென்றுள்ள சமரசப் பேச்சாளர்கள் குழு, சிறையில்அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை சந்தித்துப் பேசியுள்ளனர்.
பெரும் புண்ணாக மாறியுள்ள காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்துப் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களை அறியும் முயற்சியாக சமரச பேச்சாளர்கள் குழுவை அது அமைத்துள்ளது.
இந்தக் குழுவினர் தற்போது காஷ்மீர் சென்றுள்ளனர். தங்களது பயணத்தின் ஒரு பகுதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளையும், தீவிரவாத தலைவர்களையும் சந்தித்துப் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஒரு முக்கிய விஷயம் குறித்தும் பேச்சாளர்கள் ஆலோசித்தனராம். காஷ்மீர் தீர்வு குறித்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை மட்டும் சேர்க்காமல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தபடி செயல்படும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சிலையும் பேச்சுவார்த்தையில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம். இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக சலாஹுதீன் செயல்படுகிறார்.
நேற்று ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர்கள் சிலரையும், லஷ்கர் இ தொய்பாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஷபீர் புகாரியையும் பேச்சாளர்கள் குழு சந்தித்தது.
இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஐக்கிய ஜிஹாத் கவுன்சிலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்குமாறு தீவிரவாதிகளுக்கு, பேச்சாளர் குழு கோரிக்கை விடுத்ததாம்.
கடந்த காலத்தில்இதுபோல பேச்சுவார்த்தைக்கு வருமாறு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவர்கள் அதை ஏற்றதில்லை.
இந்த நிலையில் மீண்டும் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகியுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications