நெல்லையி்ல் தலையாரியிடம் ரூ. 1 லட்சம் அபேஸ் : கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையி்ல் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த தலையாரியிடம் ரூ. 1 லட்சம் திருடப்பட்டது.

வல்லநாடு அருகே உள்ள மணக்கரையைச் சேர்ந்தவர் முத்தையா. தலையாரி. அவர் சொத்து விற்ற பணம் ரூ.1 லட்சத்தை எடுத்துக் கொண்டு நகை வாங்குவதற்காக நெல்லைக்கு பேருந்தில் வந்தார்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அருகே வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ முத்தையா வைத்திருந்த பையை பிளேடால் அறுத்து பணத்தை திருடிவிட்டனர். இது குறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசி்ல் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். தீபாவளி நேரத்தில் நெல்லையில் வெளியூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கொள்ளையர்கள் ஜவுளிக் கடை, நகைக் கடைகள் மற்றும் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். எனவே தீபாவளிக்கு நகை, துணி எடுக்க வரும் பொதுமக்கள் பணத்தை பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+