கான்பூரில் 2 மாடிக் கட்டடத்தில் வெடிவிபத்து-4 பேர் பலி
கான்பூர்: கான்பூர் நகரில் இன்று 2 மாடிக் கட்டத்தில் பலத்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டடம் இடிந்து தரைமட்டமானது. 8 குழந்தைகள் உள்பட 12 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த வெடிவிபத்துக்கு தீவிரவாத செயல் காரணமல்ல என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் இறந்த, காயமடைந்து மீட்கப்பட்ட அனைவருமே சுகாதாரத் துறை தொழிலாளர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் எனத் தெரிய வந்துள்ளது.
இது சாதாரண வெடிவிபத்துதான், குண்டுவெடிப்பு அல்ல என்று போலீஸாரும் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பெரும் வெடிவிபத்து என்பதால் கட்டடம் முழுமையாக தரைமட்டமாகி விட்டது. அந்த கட்டடத்தில் அரசுஆரம்ப சுகாதார மைய ஊழியர்களுக்கான குடியிருப்பு இருந்தது.












Click it and Unblock the Notifications