காவிரியில் நமக்குரிய தண்ணீர் பெற சட்டப்படி நடவடிக்கை-கருணாநிதி

பெங்களூரில் நேற்று நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தற்போதைக்குத் தண்ணீர் தர முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
காவிரி நீர்ப் பிரச்சினையை சட்டப்பூர்வமாக சந்திப்போம். நமக்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு சட்டரீதியாக தொடர்ந்து வாதாடுவோம், நடவடிக்கை எடுப்போம்.
இருப்பினும் தற்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினை குறித்து மீடியாக்களில்தான் செய்தி வந்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது இரு மாநில உறவுகளைப் பாதிக்கும். தேவையில்லானத கருத்து வேறுபாடுகளுக்கு வித்திடும்.
கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடகம் கூறியதாக எனக்குத் தகவல் இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பிரச்சினையை பிரதமரிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கே பிரச்சினை குறித்துத் தெரியும். காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார் முதல்வர்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications