போக்குவரத்துக் காவலருக்கு தீ வைத்த ஆட்டோ டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள வாசியில் போக்குவரத்துத் துறை காவலரை தீ வைத்து எரித்ததற்காக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் காவலரைத் தீ வைத்து எறித்ததற்காக ஆட்டோ ஓட்டுநர் மஹேந்திர கேவத்தை கைது செய்ததாக மானிக்பூர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்தார்.
நேற்று ஆட்டோ ஓட்டுநர் கேவத் சாலை விதிகளை மீறியதற்காக அவர் மீது காவலர் அனில் அய்டோடேகர் நடவடிக்கை எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கேவத் அனில் மீது தீ வைத்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த காவலரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications