அமைச்சர் உபயத்துல்லா மகன் உசேன் மரணம்: திமுகவினர் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லாவின் மகன் உசேன் (40) நெஞ்சு வலியால் உயிர் இழந்தார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லாவின் மகன் உசேன் (40). இவர் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் அமைச்சர் வசித்து வருகிறார்.
திருமணமான உசேனுக்கு குழந்தைகள் இல்லை. தந்தைக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் ஒரு முறை கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார்.
இன்று காலை வீட்டில் இருந்த உசேன் திடீர் என்று தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்குள் அவர் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்தார். அவரின் உடலுக்கு தஞ்சை மாவட்ட திமுகவினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications