உ.பியில் டெங்குவிற்கு மேலும் 4 பேர் பலி: எண்ணிக்கை 61-ஆக உயர்வு
லக்னோ: லக்னோவில் மூன்று வயதுக் குழந்தை உள்பட 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். இதைச் சேர்த்து டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோம்தி நகர் பகுதியில் உள்ள குவாரியைச் சேர்ந்த மோனிகா (22), கமல் சிங் கஷ்யப் (34), கத்ரா பகுதியைச் சேர்ந்த பிரேம் லால் (51), சரோஞ்ஜினி (3) ஆகியோர் தான் தற்போது காய்ச்சலால் இறந்தவர்கள்.
இதற்கிடையே கத்ரா பகுதியில் இருந்து கிடைத்துள்ள 9 ரத்த மாதிரிகளில் 6-ல் டெங்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்திலயே கத்ராவில் தான் ஏராளமானோர் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சத்ரபதி ஷாஹுஜி மஹராஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 நபர் குழு இந்த காய்ச்சல் தொடர்பாக தங்கள் அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்தது. அதில் கத்ரா பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேர்களில் 9 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications