ஹெட்லி குறித்த தகவலை இந்தியாவிடம் கூறாமல் அமெரிக்கா மறைத்து விட்டது-பிள்ளை

இதுகுறித்து பிள்ளை கூறுகையில், பாகிஸ்தானிய அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லி, மும்பை தாக்குதல் குறித்த சதித் திட்டத்தில் தொடர்பு கொண்டிருப்பது குறித்த தகவலை முன்பே அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவிக்காதது பெருத்த ஏமாற்றத்தையே தருகிறது.
ஹெட்லியின் பெயரை அவர்கள் ஒருபோதும் நமக்குத் தெரிவிக்கவில்லை. அவர்கள் முன்பே சொல்லியிருந்தால், மும்பைத் தாக்குதல் திட்டத்தைத் தடுத்திருக்கலாம். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ஹெட்லி இந்தியாவுக்கு வந்தபோது அவனை எளிதாக பிடித்திருக்கலாம்.
மும்பைத் தாக்குதலுக்கு முன்பும் சரி, பின்னரும் சரி ஹெட்லியின் பெயரை அமெரிக்கா நமக்குத் தரவில்லை என்பதே உண்மை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கத் தயாராக உள்ளோம்.
ஒபாமா வருகையின்போது அசம்பாவிதம் நடக்குமா என்பது குறித்து எந்த உளவுத் தகவலும் இதுவரை இல்லை. இருப்பினும் ஒபாமாவின் வருகை பிரச்சினையில்லாமல் முடியும் என்று நம்புகிறோம். அதற்கேற்ப அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வில் இந்தியா, அமெரிக்கா இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் பிள்ளை.
ஹெட்லி குறித்த பிள்ளையின் கருத்து தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம்மோத்தி ரோமர் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு முன்பும், பின்பும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து உளவுத் துறைத் தகவல்களை இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொண்டுள்ளது.
ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்தியா கோரியபோது, அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்றார். ஆனால் ஹெட்லி பெயரை இந்தியாவிடம் கூறினோம் என்று ரோமர் தெரிவிக்கவில்லை.
ஹெட்லி, அமெரிக்காவுக்கே ஒரு உளவாளியாக இருந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்தத் தகவலையும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து மறைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
காலியான வீதிகள்.. விழி பிதுங்கும் தொழிலதிபர்கள்.. ஆள் இல்லாத "அமீரகம்".. கோஸ்ட் டவுன் துபாய்! -
ஈரானின் மரண விளையாட்டு.. சத்தமின்றி அமெரிக்காவிற்கு ‘செக்மேட்’.. சிக்கி நிலைகுலைந்த இஸ்ரேல்! -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
30 வருட அமெரிக்க ஆதிக்கத்தை.. உடைத்த ஈரான்.. தயாராக இருங்க.. உலகம் பெரிய மாற்றத்தைச் சந்திக்குது -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்












Click it and Unblock the Notifications