மேற்கு வங்கத்தி்ல ஆற்றில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காகதீப், மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விழுந்ததில், 18 பேர் பலியானார்கள். 100 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சாகர் தீவுக்கு அருகே உள்ள முரிகங்கா ஆற்றில் இந்த அசம்பாவிதம் நடந்தது.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த படகு சென்றபோது பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்தது.
இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நூறு பேர் வரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ப் பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. படகில் பெண்களும், குழந்தைகளும் அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கடற்படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது. உயிருடன் 50 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications