சிறுவன் கீர்த்திவாசன் மீண்டது எப்படி-சிறுவனைக் கடத்தியவர்கள் எங்கே? பரபரப்புத் தகவல்கள்!
சென்னை: சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் கீர்த்திவாசன் மீண்டது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிறுவன் மீட்கப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 3 விதமான கோணங்களில் தகவல்கள் வருகின்றன.
முதல் தகவல்
நேற்று இரவு வாக்கில் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷுக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையிலான பேரம் முடிந்துள்ளது. இதில் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கொடுப்பதாக ரமேஷ் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. போலீஸ் ஆலோசனையின் பேரில் இந்தப் பணத்தைத் தருவதாக ரமேஷ் ஒப்புக் கொண்டாராம்.
இதையடுத்து பணத்தை ஒரு காரில் கொண்டு சென்றுள்ளார் ரமேஷ். கடத்தல்காரர்கள் கூறிய ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணத்தை காரில் வைத்து விட்டு காத்திருந்தார் ரமேஷ்.
சிறிது நேரத்தில் கடத்தல்காரர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியதாக தெரிகிறது.
அதற்கடுத்த சிறிது நேரத்தில் அண்ணா நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுவனை விட்டு விட்டு தப்பியுள்ளனர் கடத்தல்காரர்கள்.
2வது தகவல்
பணம் வைப்பது வரை மேற்கூறியபடி நடந்துள்ளதாக தெரிகிறது. சிறுவனை அண்ணா நகரில் ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு முன்பாக காரில் கொண்டு வந்து இறக்கியுள்ளனர் கடத்தல்காரர்கள். அப்போது கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர், துணை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் 10 ஆயுதம் தாங்கிய போலீஸ் படை கடத்தல்காரர்களை வளைத்துப் பிடித்ததாக கூறப்படுகிறது.
சிறுவனை பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு கடத்தல்காரர்களுடன் போலீஸ் படை அங்கிருந்து பறந்து விட்டதாக அந்தத் தகவல் கூறுகிறது.
3வது தகவல்
சிறுவனை அண்ணா நகரில் விட்ட கடத்தல் கும்பல், போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி விட்டதாக இந்த 3வது தகவல் கூறுகிறது.
தற்போது நாலாபுறமும் போலீஸார், கடத்தல் கும்பலை படு தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தல்காரர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே கடத்தல்காரர்களைப் பிடிக்கும்போது என்கவுன்டர் நடப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
மொத்தத்தில் இந்த கடத்தல் நாடகம் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிறுவன் மீண்ட விதமும், கடத்தல்காரர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரமும் பெரும் மர்மமாக உள்ளது. ஆனால் இதுவரை சென்னை காவல்துறை ஆணையர் கடத்தல் மற்றும் சிறுவன் மீட்பு குறித்து தகவல் ஏதும் தராமல் உள்ளதால் சஸ்பென்ஸ் கூடிக் கொண்டே போகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications