மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை: சக மாணவர்கள் கேலி செய்து கிண்டல் செய்ததால் மனம் உடைந்த 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஸ்வேதா. 11 வயதான இவர் அங்கு ஒரு பள்ளியில் படித்து வந்தார். வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் ஸ்வேதாவை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ஸ்வேதா தனது வீட்டில் தீக்குளித்து விட்டார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications