தூத்துக்குடி-யோகா பயிற்சிக்குச் சென்ற மாணவி மாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே யோகா வகுப்புக்கு சென்ற மாணவி மாயமானார்.
ஏரல், கொட்டாலங்குறிச்சியைச் சேர்தவர் குமார். இவரது மகள் சிந்துஜா (17).
சிந்துஜா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிவன் ராஜ் என்பருடன் காதல் திருமணம் செய்ய வீட்டைவிட்டு வெளியேறியது. பின்னர் இருவரும் ஏரல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு வந்த சிந்துஜாவின் தந்தை குமார், சிந்துஜாவிற்கு 17 வயதே ஆகிறது, அவர் மைனர் என்று புகார் அளித்தார். இதனையடுத்து சிந்துஜாவை விசாரித்தனர் போலீசார். அவர் தந்தையுடன் செல்ல மறுத்ததால் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை யோகா பயிற்சி செல்வற்காக காப்பகத்தை விட்டு வெளியே சென்ற சிந்துஜா மாலை வரை திரும்பவில்லை. இதனால் காப்பக நிர்வாகி சுமித்ஷா தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணமல் போன சிந்துஜாவை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications