பாகிஸ்தானில் தீபாவளி!
ஏதோ ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஓரிரு இந்துக்களால் மட்டுமே கொண்டாடுப்படுவதாக யாரும் நினைத்து விடவேண்டாம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வர்ர்தகத் தலைநகர் கராச்சி மற்றும் ராபவல்பிண்டி போன்ற நகரங்களில் ஆண்டுதோறும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தான் முழுக்க இஸ்லாமியர்கள் வாழும் தேசமாக இருந்தாலும் இந்துக் குடும்பங்களும் இருக்கின்றன. பிரிவினைக்குப் பிறகும் சொந்த மண்ணை விட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து செல்ல மனமின்றி பாகிஸ்தானிலேயே மைனாரிட்டிகளாக தங்கி விட்டவர்கள் இவர்கள்.
சமீப ஆண்டுகள் வரை தங்கள் பண்டிகை தினங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வந்த இந்துக்கள், கடநத் சில ஆண்டுகளாக குழுக்களாக இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்தக் கொண்டாட்டங்களில் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரவலாக கலந்து கொண்டு தீபாவளியின் குதூகலத்தை சந்தோஷமாக அனுபவிக்கின்றனர் என்பது மனதுக்கு ஆறுதலான விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியர்கள் நிறைந்து வாழும், இலங்கை, நேபாளம், மொரீசியஸ், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஜப்பான், தாயல்ந்து, தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டிரினிடாட் டெபாகோ, கயானா, சுரினாம், பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!