கியூபா-பாகி்ஸ்தானில் விமானங்கள் விழுந்து நொறுங்கி 91 பேர் பலி
ஏரோ கரீபியன் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் கியூபாவின் சான்டியாகோ டி கியூபா நகரிலிருந்து தலைநகர் ஹவானாவுக்குச் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் கியூபாவின் மிகப் பெரியான ஏரியான சஸா அருகே விழுந்து நொறுங்கியதில் 61 பயணிகளும் 2 விமானிகள் உள்ளிட்ட 7 சிப்பந்திகளும் பலியாயினர். பலியானவர்களில் 28 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக் தெரியவில்லை.
பாகிஸ்தானில் விமான விபத்து:
இந் நிலையில் கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானின் ஜே.எஸ். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலியாயினர்.
இன்று காலை 7 மணிக்கு இந்த விபத்து நடந்தது. கராச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நொடிகளில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
அமெரிக்காவின் யூனியன் டெக்ஸாஸ் பெட்ரோலியம் நிறுவனத்தால் இந்த விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இதில் பயணித்த அந்த நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் 2 விமானிகள் உள்ளிட்ட 3 சிப்பந்திகளும் பலியாகிவிட்டனர்.